கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேட்டில் எந்த ஒரு இந்தியரும் புறக்கணிக்கப்படமாட்டார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய குடிமக்கள் பதிவேட்டை தனது மாநிலத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். மேலும் இது பாஜ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்து இருந்தார். இந்நிலையில், மம்தாவுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், “சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் சட்ட ரீதியாக கையாளப்படுவார்கள்.