மணிலா: இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் உட்பட 5 பேர் 2019ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதை நேற்று பெற்றனர். ஆசியாவின் மிக உயரிய விருதாக ரமோன் மகசேசே விருது கருதப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மூன்றாவது அதிபராக இருந்த ரமோன் டெல் பியாரியோ மகசேசேவின் நினைவாக ஆண்டுதோறும் மக்களுக்கு சிறந்த சேவையாற்றுபவர்களுக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டுக்கான விருது, இந்திய பத்திரிகையாளரான என்டிடிவியின் மூத்த செய்தி ஆசிரியர் ரவீஷ்குமார் உட்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றது.