ஓசூர்: ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவன் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரை அடுத்த நெருப்பு குட்டை கிராமத்தை சேர்ந்த தமிழரசன், சதீஸ் ஆகியோர் கெலமங்கலம் நோக்கி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இதேபோல ராயக்கோட்டை நோக்கி தனது மனைவி முனிரத்னத்துடன் சின்னலட்சுமணன் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். தொடர்ந்து வரகனப்பள்ளி என்ற இடத்தில் வளைவில் சென்ற போது எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் வேகமாக மோதி விபத்துள்ளது. இதில் வாகனங்களை ஓட்டி வந்த தமிழரசன், சின்னலட்சுமணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.