ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மீன், இறால் வளர்ப்பு உணவு பொருட்கள் நாசமானது. ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டையில் மத்திய அரசின் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அலுவலகம் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த அலுவலகம் சைதாப்பேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையொட்டி அங்குள்ள தளவாட பொருட்களை லாரிகளில் கொண்டு செல்லும் பணி 2 நாட்களாக நடந்து வருகிறது. 90 சதவீத பொருட்களை கொண்டு சென்ற நிலையில் நேற்று மீதமுள்ள பொருட்களை லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்த போது மின்கசிவினால் 3வது மாடியில் திடீர் என தீவிபத்து ஏற்பட்டது.