சென்னை:ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகன்கள் குமார் (48), வேலு (45). பூர்வீக சொத்து தொடர்பாக அண்ணன், தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வேலு ஜமீன் பல்லாவரத்தை விட்டு வெளியேறி, சிட்லப்பாக்கம் பகுதியில் குடியேறினார். கடந்த 17-8-2014 அன்று குமார் தனது தம்பி வேலு வசிக்கும் சிட்லபாக்கத்துக்கு சென்று, தகராறில் ஈடுபட்டார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அதில், ஆத்திரமடைந்த குமார், அங்கிருந்த ஆட்டுக்கல்லை எடுத்து வேலுவின் தலையில் போட்டார். இதில், வேலு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.