முருகப்பா தங்க கோப்பை: அரையிறுதியில் ஐஓசி

சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கப் போட்டி தொடரில் நடப்பு சாம்பியனான ஐஓசி  அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பி பிரிவில் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில்  மத்திய தலைமை  செயலகம்- பஞ்சாப் சிந்து வங்கி அணிகள் மோதின. தொடர்ந்து 3 போட்டிகளில் டிரா செய்திருந்த மத்திய தலைமை செயலக அணி 4-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் சிந்து வங்கியை வீழ்த்தியது. அதனையடுத்து புள்ளிப் பட்டியில் 6 புள்ளிகளுடன் 2வ இடம் பிடித்த மத்திய தலைமை செயலகம் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த பிரிவில் ஏற்கனவே இந்திய கப்பற்படை அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. அதேபோல் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள இந்தியன் ஆயில் கார்பரேஷன்(ஐஓசி)-பஞ்சாப் நேஷனல் வங்கியும் விளையாடின.

இந்தப் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியில் முடிவில் 10 புள்ளிகளுடன் ஏ பிரிவில் நடப்பு சாம்பியனான ஐஓசி முதலிடம் பெற்றது. இந்த போட்டியில் தோற்றாலும் பஞ்சாப் நேஷனல் வங்கி 6 புள்ளிகளுடன் ஏ பிரிவில் 2வது இடம் பெற்றுது. அதனால் இந்த 2 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று போட்டிக்கு ஓய்வு நாள். நாளை நடைபெறும முதல் அரையிறுதியில்  ஐஓசி-மத்திய தலைமை செயலகம் அணிகளும், 2வது அரையிறுதியில் இந்திய கப்பற்படை- பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகளும் விளையாட உள்ளன.

Related Stories: