திருவொற்றியூர்: மணலி அருகே மது போதையில் வாகனம் ஓட்டியதால் வழக்குப்பதிவு செய்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.மணலி, சிபிசிஎல் தொழிற்சாலை முன்பாக மணலி போக்குவரத்து உதவி ஆய்வாளர் எழில் தலைமையில் காவலர் ஜெகன் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த எண்ணூரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மணிமாறன் (45) என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது மது போதையில் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணிமாறன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.