உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பி.வி சிந்து

 பசல்  : உலக பாட்மின்டன் தொடரின் பைனலுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறினார் இந்தியாவின் சிந்து.சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் சென் யு பெயை சந்தித்தார்.முதல் செட்டை 21 - 7 என எளிதாக கைப்பற்றினார் சிந்து. அடுத்த செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் 21-14 என வசப்படுத்தினார். 40 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 21- 7, 21-14 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: