அமெரிக்கா: விண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. உலகின் பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடியில் இருந்து நீரை எடுத்து வரும் நிலையில், ரிச்சர்ட்ஸ் ரெயின் வாட்டர் நிறுவனம் நீருக்காக வானை நம்பியுள்ளது. நீர் மாசுபாடு அடைந்து வரும் நிலையில், தூய்மையான நீருக்காக 2000-மாவது ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம், மழைத்துளிகளை அரை லிட்டர் பாட்டிலில் நிரப்பி விற்று வருகிறது. வீட்டின் மொட்டை மாடிகளில் இருந்து வரும் மழை நீரில் முதல் 10 நிமிடங்கள் சேகரிக்காமல் விட்டுவிட்டு, அதன்பின் வரும் நீரை, ஃபைபர் கண்ணாடிக் குடுவையில் அடைத்து, அல்ட்ரா வயலெட் ஒளி, ரிவர்ஸ் ஆஸ்மாஸில், குளோரினுக்கு பதில் ஆக்சிஜன் ஆகிய மூன்று நிலை வடிப்பான் மூலம் சுத்திகரித்து விற்று வருகிறார்.