சென்னை : வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இலக்காக்களை ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட எந்த ஒரு அமைச்சரிடமும் ஒப்படைக்கமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 28ம் தேதி முதல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முதல்வர் பழனிசாமி சுமார் 12 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். கல்வி, உணவு, எரிசக்தி துறை மற்றும் தொழில்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.