கொடைக்கானல்: மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தொடர்ந்து சாரல் மழையால் குளிர்ந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குற்றால சாரல் போன்று கொடைக்கானலிலும் பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சாரல் மழை நேற்று மதியம் தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. காலை முதலே அவ்வப்போது பெய்து வந்த சாரல் மழை மதியத்திற்கு அடுத்து தொடர்ச்சியாக பெய்து வருகிறது.