மத உணர்வை தூண்டும் விதமாக பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயருக்கு சம்மன்

காஞ்சிபுரம்: மத உணர்வை தூண்டும் விதமாக பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்த சையது அலி என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்மன் அளித்தனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 22ல் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அத்திவரதர் பற்றி பேட்டியளித்த ஜீயர் மத உணர்வை பாதிக்கும் விதமாக பேசியதாக புகார் வந்ததை அடுத்து அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

Related Stories: