*விதிமுறை மீறும் கட்டடங்கள் ஒழுங்குபடுத்தப்படுமா?
இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்தோடிச்செல்ல வழியின்றி, மண்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க அதிகமான சரிவு உள்ள இடங்களில், அடுக்குத்தளம், சம உயர வரப்புகள் ஏற்படுத்த வேண்டும். கட்டடங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் முறையாக செய்தால், மண்சரிவு மற்றும் மண் அரிப்பு தடுக்கப்படும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் மழைக்காலங்களில் இம்மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, நீலகிரி மக்கள் தங்களது உயிரையும், உடைமைகளையும் இழப்பது வாடிக்கையாகி விட்டது. இனி வரும் காலங்களில் புதிய கட்டடம் கட்டும்போது, அதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்பது சமூக நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுபற்றி மத்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 90 சதவீத நிலச்சரிவு மிக அதிக மழை பெய்வதால் ஏற்படுகிறது. மற்றொன்று நிலத்தை நாம் பயன்படுத்துவதை பொறுத்து ஏற்படுகிறது. கட்டடம் மற்றும் விவசாய நிலங்கள், படிமட்ட முறையில் அமைக்கப்படாமல் உள்ளதாலும், வடிகால்கள் தூர் வாரப்படாமலும் உள்ளதாலும், இதுபோன்ற பெரு வெள்ளம் வரும்போது விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்குதல், மேல் மட்ட மண் அடித்துச் சல்லுதல் போன்றவைகள் ஏற்படுகிறது. மேலும், நீரோடைகள் மற்றும் மழை நீர் வடிகால்கால்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், தண்ணீர் செல்ல வழியின்றி இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீரோடைகள் மற்றும் ஆறுகளை தூர் வாரினால், விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல், நீர் வழித்தடங்களில் ஆக்கிரிமிப்புக்களை அகற்றுவதன் மூலம் தண்ணீர் தேங்குதல், மண் அரிப்பு தடுக்கப்படும். சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது, சாய்மானமாக இல்லாமல், செங்குத்தாக வெட்டி எடுப்பதால், மாவட்டம் முழுவதும் மழைக்காலங்களில் சாலையோரங்களில் பெரிய அளவிலான மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். இவ்வாறு மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் கூறினார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மக்கள் வாழ தகுதி இல்லாத, அதாவது நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் குடியிருப்பு உள்ளது. ஓடை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இவர்கள், சாதாரண ஏழை மக்கள். கன மழை பெய்யும்போது, இதுபோன்ற பகுதிகளில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டு, பெரிய அளவில் சேதம் மற்றும் பாதிப்பு ஏற்படுகிறது. ஓடை புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களின் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. இவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மழை நீர் வடிந்து செல்ல ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.