யானை மிதித்து விவசாயி பலி

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி அப்பையா(65). நேற்று முன்தினம் மாலை, தக்காளி தோட்டத்திற்கு உறவினர் நாகராஜுடன்(50) காவலுக்கு சென்றார். திடீரென அங்கு வந்த ஒற்றை யானையை கண்டு, இருவரும் ஓடினர். ஆனால், அப்பையாவை தூக்கி வீசி யானை மிதித்து கொன்றது.  இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், அங்குள்ள வனத்துறை விடுதிக்குள் நுழைந்து ஜன்னல் உள்ளிட்டவற்றையும், வளாகத்தில் நிறுத்தியிருந்த வேன், வனத்துறை ஊழியரின் டூவீலரையும் அடித்து நொறுக்கினர்.

Related Stories: