ஜெய்ப்பூர்: பாகிஸ்தானின் கராச்சி - ராஜஸ்தானின் ஜோத்பூர் இடையே இயக்கப்படும் தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இந்தியா நேற்று ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தானின் கராச்சி - ராஜஸ்தானின் ஜோத்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த தார் எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்வதாக கடந்த 9ம் தேதி பாகிஸ்தான் அறிவித்தது.