கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விஷம் கலந்த குடிநீர் குடித்து 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட ஒரு குடும்பத்தினரை பழிவாங்க குடிநீர் குழாயில் விஷம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. டி.வி புதூர் கிராமத்தில் விஷம் கலந்த குடிநீரை குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், 15 மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.