சென்னை: சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வரும் ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 8.00 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சோர்ந்த கமரூதீன் (27), அவரது உறவுப்பெண் ரகீலா (23) ஆகிய 2 பேர் வந்தனர். சந்தேகத்தின்ேபரில் அவர்களை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர்கள் நாங்கள் உள் நாட்டு பயணிகள் எங்களை ஏன் விசாரிக்கிறீர்கள் என்று கேட்டனர்.நீங்கள் சர்வதேச விமானத்தில் வருகிறீர்கள் சந்தேகப்பட்டால் உங்களை சோதனை செய்ய எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று இருவரிடம் சோதனை செய்தனர்.