விருதுநகர்: விருதுநகர் அருகே சிவகாசி சாலையில் மத்திய சேனையை ஒட்டிய முத்தலாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் 220 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை 6 மணிக்கு பட்டாசு ஆலையில் வேலை செய்வதற்காக 4 ஊழியர்கள் வந்துள்ளனர். அதில், மத்தியசேனையை சேர்ந்த மாயழகன் (45), வெடிமருந்து அறையில் உள்ள தூக்குமணி மருந்தை, மற்றொரு அறைக்கு கொண்டு செல்ல முயன்றார். அறையை திறந்து பெட்டியை இழுத்து சென்றபோது, அறை வெப்பமாக இருந்ததால் உராய்வு ஏற்பட்டு வெடிமருந்துகள் வெடித்து சிதறின. இதில் மாயழகன் உயிரிழந்தார்.