நெல்லையில் கொள்ளையர்களை விரட்டிய வயதான தம்பதியர்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பாராட்டு

மும்பை: நெல்லையில் கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதிக்கு ட்விட்டரில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பாராட்டு  தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நேற்று முன்தினம் இரவு 9மணி அளவில் வயதான தம்பதியர்கள் சண்முகவேல்  சிந்தாமணி வசிக்கும் வீட்டில் இரண்டு முகமூடி கொள்ளையர்கள் நுழைந்ததும், அவர்களிடம் இருந்து வயதான தம்பதியர்கள் தப்பிக்க துணிச்சலாக  சாதூர்யமாக அந்த இரு கொள்ளையர்களை அடித்து விரட்டிய காட்சிகள் சமுக வலைத்தளங்களில் பரவி வைரலாகி உள்ளது.

தற்போது, அந்த வயதான தம்பதியர்களை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நேரில் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்ததுடன் இரு தம்பதிகளையும் அழைத்து பாராட்டினார். இந்த கொள்ளை சம்பவத்தில் விரைவான  நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைந்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வயதான தம்பதியர்கள்களை  பாராட்டும் விதமாக தம்பதியினர் குறித்த செய்தியை ரீடுவிட் செய்து braaaaavoooooooo என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: