திருவொற்றியூர்: வீட்டில் போதைப்பொருள் பதுக்கி விற்ற தம்பதி உள்பட 5 பே ரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 200 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவொற்றியூர் அண்ணா காலனியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், அங்குள்ள கடை மற்றும் வீடுகளில் நேற்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஒரு வீட்டில் மாவா எனப்படும் போதைப்பொருள் பதுக்கி விற்பது தெரிந்தது. இது தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் (43), அவரது மனைவி தீபா (36) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் இருந்து மொத்தமாக மாவா வாங்கி வந்து, சிறு சிறு பொட்டலங்களாக விற்றது தெரியவந்தது.