சோழவரம் பகுதியில் பதுங்கி இருந்த 25 ரவுடிகள் கைது

புழல் : சோழவரம் பகுதியில் பதுங்கியிருந்த 25 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. சோழவரம் காவல் எல்லைக்கு உட்பட்ட சோழவரம், காந்தி நகர், அம்பேத்கர் நகர், பெருமாளடிபாதம், நாகாத்தம்மன் நகர், நல்லூர் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல ரவுடிகள் பதுங்கியிருப்பதாக சோழவரம் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மேற்கண்ட பகுதிகளில், பொன்னேரி ஏஎஸ்பி பவன்குமார் தலைமையில் சோழவரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், எஸ்ஐ வேல்மணி ஆகியோர் தலைமையில் போலீசார் வீடு, வீடாகச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த 25 ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை சோழவரம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

சோழவரம் பகுதியில் ஒரேநாள் இரவில் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: