சிங்கப்பூர்: 91 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தந்தங்களை சிங்கப்பூர் அரசு பறிமுதல் செய்துள்ளது. காங்கோவிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு சென்ற கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்திற்கு வந்தது. மேலும் அந்த கப்பலில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து அப்போது மரப்பொருள் என்று பெயரிடப்பட்டிருந்த 3 கன்டைனர்களை அதிகாரிகள் திறந்து பார்த்த போது இரண்டில் சுமார் 10 டன் எடை கொண்ட யானை தந்தங்கள் இருந்தன. மேலும் இதை தொடர்ந்து அவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் 91 கோடி ரூபாய் ஆகும். இதனை அடுத்து 300 யானைகளை கொன்று தந்தங்களை வெட்டி எடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மற்றொரு கன்டைனரில் சுமார் 13 டன் எடை அளவிற்கு எறும்பு தின்னி விளக்கின் செதில்கள் இருந்தன. அதாவது சுமார் 8 ஆயிரம் விலங்குகளை கொன்று இந்த செதில்களை எடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.