கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் சாரல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடையநல்லூர் நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழைக்காலத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலினால் ஏராளமான பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு முதல் ஆணையாளர் பவுன்ராஜ் தீவிர முயற்சியால் சுயஉதவிக்குழு பெண்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று கொசுப்புழு உற்பத்தியாகிறதா என ஆய்வு செய்து கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டபிறகு தற்போது கட்டுக்குள் உள்ளது.