ராணிப்பேட்டை அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் பகுதியில் இருந்து அம்மூர் செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை தற்போது ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் செட்டித்தாங்கல்-அம்மூர் மக்கள், வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல நேரங்களில் இந்த சாலையில் உள்ள பள்ளங்களால் அதிகளவில் விபத்துக்கள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு செட்டித்தாங்கல்-அம்மூர் சாலையை சீரமைக்கவேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: