நாகை : நாகை அரசு ஆஸ்பத்திரியில் போதிய மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தால் இருளில் மூழ்கியுள்ளதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு நாகை, சிக்கல், நாகூர், வேதாரண்யம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக இருப்பவர்களின் உறவினர்கள் சிகிச்சைபெற்று நோயாளிகள் வெளியேறும் வரை ஆஸ்பத்திரியில் தங்கி கொள்கின்றனர். இவ்வாறு தினந்தோறும் நோயாளிகளும், நோயாளிகளின் உறவினர்களும் வந்து செல்லும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் போதுமான மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது.