மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தேர்வை பிசிசிஐ ஒத்திவைத்தது. மும்பையில் இன்று நடைபெற இருந்த கூட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.கேப்டன் தேர்வு, தோனி ஓய்வு போன்ற சர்ச்சையால் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. ஒரு நாள் போட்டி, 20/20, டெஸ்ட் போட்டி என்று பல போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.