கராச்சி: பாகிஸ்தானில் நடந்த நிலக்கரி சுரங்க தீ விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் உயிருடனும், 8 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குயெட்டாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மின் கசிவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுரங்கத்தின் உட்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 11 பேர் சிக்கிக் கொண்டனர். மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சுரங்கத்தில் உளள விஷவாயு கசிந்ததால் மீட்புக் குழுவை சேர்ந்த இருவர் மயக்கம் அடைந்தனர். இதனால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.