வாணியம்பாடியில் குற்றச்செயல்களை தடுக்க 40 சிசிடிவி கேமராக்கள்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறை சார்பில் 40 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. வாணியம்பாடி நகர பகுதிகளில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, எஸ்பி பிரவேஷ் குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி வாணியம்பாடி டிஎஸ்பி முரளி தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வாணியம்பாடி நகரின் முக்கியப்பகுதிகளில் 40 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதன் கட்டுபாட்டு அறை டிஎஸ்பி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து சிசிடிவி காமிராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கலாம். இதுகுறித்து டிஎஸ்பி முரளி கூறியதாவது: அண்மையில் பள்ளி ஒன்றில் நடந்த குற்ற செயலை கண்டறிய சிசிடிவி கண்காணிப்பு கேமரா உதவியாக இருந்தது. எனவே அதேபோன்று நகரப்பகுதியில் நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களை கண்டறியவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும் இந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: