வாஷிங்டன்: அமெரிக்க பெண் எம்பி-க்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு டிரம்பின் இனவெறி ரீதியிலான கருத்துக்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதிபர் ட்ரம்பின் கடுமையான குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமெரிக்க பெண் எம்.பி-க்கள் ரஷீதா தலீப், ஒகாசியோ கோடீஸ், ஐயானா பிரெஸ்லி, இல்ஹான் உமர் ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்கள் ஆவர். பெண் எம்.பிக்களின் எதிர்ப்பால் அதிருப்தியடைந்த டிரம்ப், தனது த்விட்டேர் பக்கத்தில் அவர்களின் இனவெறியை தூண்டும் வகையில் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் வாஷிங்டனில் பேசிய டிரம்ப், தமது கருத்தில் தவறு ஒன்றும் இல்லை என தெரிவித்தார். அரசு திட்டங்கள் மீது அதிருப்தியடைபவர்கள் அமெரிக்காவை விட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு செல்லலாம் என்று ட்ரம்ப் சாடினார்.