ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

ஒசாகா: ஒசாகாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார். வரும் 28-29 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. 14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி- 20  நாடுகளின் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்ற பிரதமர் மோடி நமது நாட்டின் சார்பில் கலந்துகொள்கிறார். இதற்காக தனிவிமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று ஜப்பான் சென்றடைந்தார். ஒசாகா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஜி 20 மாநாட்டின் போது, பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர், சீன அதிபர், அமெரிக்க அதிபர் ஆகிய முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடி பங்கேற்கும் 6-வது ஜி -20 மாநாடு இதுவாகும்.

Related Stories: