கோவை: கோவை பீளமேட்டில் உள்ள ஒரு காட்டேஜில் திருமணமாகாத ஆண், பெண் சேர்ந்து வாழ வீடுகளை வாடகைக்கு விடும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோவை கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனியார் நிறுவனம் வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டேஜ் போன்று நடத்தி வருகிறது. இங்கு திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சேர்ந்து தங்கி கொள்ளலாம் என்று இணையத்திலும் விளம்பரப்படுத்தி வருகிறது. இதனால் குடியிருப்பில் எந்நேரமும் இளம் பெண்கள், ஆண்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.