போர்டோ அலெக்ரே: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது. பிரேசில் நாட்டின் போர்டோ அலெக்ரே நகரில் நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா - கத்தார் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் மார்டினஸ் 4வது நிமிடத்திலும், ஆகுவரோ 82வது நிமிடத்திலும் கோல் போட்டனர். நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கோல் அடிக்கத் தவறினார். எனினும், நேற்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடிய மெஸ்ஸிக்கு சக வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.