வானூர்: புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில், 36 அடி உயர, விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஜெயமங்கள மகா கணபதி, ஜெயமங்கள பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி சன்னதிகளும் அமைந்துள்ளன. கடந்த மே மாதத்தில், வாரி வெங்கடாசலபதிக்கு புதிதாக சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் ஐந்து நிலை ராஜகோபுரம், கணபதி, பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி, மூலவர் ஆஞ்சஅநேயர், புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள வாரி வெங்கடாசலபதி சன்னதி விமானங்களுக்கும், மூலவர்களுக்கும் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 5 மணிக்கு, சுப்ரபாதம், விஸ்வரூபம், 6மணிக்கு, திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி சேவை, 7 மணிக்கு, புண்யாஹம், கால சந்தி பூஜை, 8 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, பஞ்சாக்னி, ஸமாரோபணம் உள்ளிட்ட எட்டாம் கால பூஜைகள் நடந்தது.