சேலம்: பொள்ளாச்சியில் ஏராளமான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் என்ற ரிஷ்வந்த் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதேநேரத்தில், இதில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக வந்த புகாரை அடுத்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தி, கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.