பொள்ளாச்சி வழக்கு கைதிகள் சேலம் சிறைக்கு மாற்றம்

சேலம்:  பொள்ளாச்சியில் ஏராளமான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திருநாவுக்கரசு,  வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் என்ற ரிஷ்வந்த் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதேநேரத்தில், இதில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக வந்த புகாரை அடுத்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தி, கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கைது செய்யப்பட்ட 5 பேரையும், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்த நிலையில், கோவை சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் மீது, கைதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து, இவர்கள் 4 பேரும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களுடன் மணி என்ற மணிவண்ணன் என்ற விசாரணை கைதியும், சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories: