கோவையை சேர்ந்த 2 பேரின் என்.ஐ.ஏ. காவல் நிறைவு

கோவை: இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்திய அமைப்புடன் தமிழகத்தை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடந்த 12ம் தேதி கோவையில் முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா (38) ஆகியோர் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருவரையும் காவலில் எடுத்து 5 நாள் என்ஐஏ விசாரித்தது. விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளது. கோவையில் மேலும் சிலர் வீடுகளில் சோதனை நடத்தவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் 2 பேரின் என்ஐஏ காவல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. பின்னர் அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் கேரள சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: