கதிராமங்கலத்தில் 2வது நாளாக கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு சீரமைப்பு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கதிராமங்கலம் வெள்ளை பிள்ளையார் கோயில் தெருவில் விக்ரமன் ஆற்று படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம்  17 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த எண்ணெய் குழாயில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது. குழாயில் இருந்து கச்சா எண்ணெய், புகையுடன் வெளியேறி விக்ரமன் ஆற்று பகுதியில் 200 மீட்டர் நீளத்துக்கு ஓடியது.  இதையடுத்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து குழாயில் கச்சா எண்ணெய் செல்வதை தற்காலிகமாக நிறுத்தினர். நேற்று 2வது நாளாக நேற்று ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் உடைந்த குழாய் பகுதியை சீரமைத்தனர். இதை திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: