சவுத்தாம்ப்டன்: உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இடம் பெற்றுள்ளார். அவருக்கு முதல் 3 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் காயம் காரணமாக ஒய்வு தரப்பட விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது . அதில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். ஆக அந்தப் போட்டியில் 2 விக்ெகட், ஒரு கேட்ச், ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் என அசத்தியிருந்தார். இந்நிலையில் புதன்கிழமை இந்திய அணியினர் சவுத்தாம்ப்டனில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது ஜஸ்பிரித் பும்ரா வீசிய யாக்கர் விஜய் சங்கரின் கால் விரல்களை பதம் பார்த்தது. அதனால் அவர் வலியால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் ‘பயப்படும்படி ஏதுமில்லை’ என்று அணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் நாளை ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் போட்டியில் விஜய் சங்கர் இடம் பெறுவாரா என்பது குறித்து இதுவரை தகவல் ஏதுமில்லை.