லக்னோ: உத்திரபிரதேசத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரேலி நகரில் நான்கு நாட்களுக்கு முன்னர் பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு திடீரென மூச்சுக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு ஆண்கள் பிரிவில் இருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதிக்க மறுத்து பெண்கள் பிரிவிற்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.