புதுடெல்லி: மழை நீரை சேமிக்கும்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் குடிநீர் பிரச்னை தலைதூக்கியுள்ளது. இதனால், மக்கள் நெடுந்தொலைவு சென்று குடிநீர் எடுத்துவரும் அவல நிலை நிலவுகிறது. இதையடுத்து, மழை நீரை சேமிக்கும்படி நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அப்போது, இயற்கை கொடுத்த மழை நீரை முடிந்த அளவுக்கு சேமிக்க ேதவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஆறுகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே சிறு அணைகள் மற்றும் தடுப்பணைகளை கட்ட வேண்டும் அல்லது ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை பராமரிப்பு ெசய்ய வேண்டும், அணைகளை தூர்வார வேண்டும்.