திருச்சி : திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சன்னதி முன் அமைக்கப்பட்ட புதிய தங்க கொடிமரத்திற்கு இன்று கும்பாபிஷேகம் நடந்தது.பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இக்கோவிலில் ஆடி வெள்ளி, ஆடிபூரம், நவராத்திரி, வசந்த உற்சவம், மண்டல பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் பிரமாண்டமாக நடைபெறும்.அகிலாண்டேஸ்வரி சன்னதி முன் 50 அடி உயரத்தில் தாமிர தகடுகள் பொருத்தப்பட்ட கொடிமரம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கொடிமரத்தின் மரம் மாற்றப்பட்டு புதிய தாமிர தகடுகள் பொருத்தி தங்க முலாம் பூசப்பட்டு கொடிமரம் புதுப்பிக்கப்பட்டது.