புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் விமானப்படை விமானம் நொறுங்கியுள்ள இடத்துக்கு மீட்பு படை விரைந்துள்ளது.அசாம் மாநிலம், ஜோர்கத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு கடந்த 3ம் தேதி, ராணுவ வீரர்கள் 5 பேர் உட்பட 13 பேருடன் சென்ற ஏஎன்32 ரக விமானப்படை சரக்கு விமானம் மாயமானது. 8 நாள் தேடுதலுக்குப் பின் விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தின் லிபோ மலைப் பகுதியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.அங்கு, விமானத்தில் சென்றவர்கள் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை பார்க்க மீட்பு குழு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.