திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பெரிய ஏரியில் சிறுவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, தண்ணீருக்குள் காலில் ஏதோ தட்டுப்பட்டது. அங்கிருந்த இளைஞர்கள் வெளியே எடுத்து பார்த்தபோது, இரண்டரை அடி உள்ள கருங்கல் அனுமன் சிலை என தெரியவந்தது. இதுகுறித்து, போளூர் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மண்டல துணை தாசில்தார் ஆர்.முனிராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெ.ரமேஷ் விரைந்து சென்று ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட அனுமன் சிலையை எடுத்து வந்து தாசில்தார் பா.ஜெயவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.