ஒட்டாவா: கனடாவில் திமிங்கலம், டால்பீன் ஆகியவற்றை வளர்க்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ஃப்ரீ வில்லி என்ற புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் யாரும் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றை வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்துவதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.