வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் காலனி தோல் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உயிரிழந்தனர் மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மணியாரக்குப்பம் பகுதியில் விபத்தானது நிகழ்ந்துள்ளது. ஆம்பூர் தனியார் காலனி தொழிற்சாலைக்கு வேன் மூலம் ஆட்களை அழைத்து செல்வது வழக்கம். இவ்வாறாக ஆட்களை ஏற்றி சென்ற வேன் ஒன்று ஆம்பூர் மணியாரக்குப்பம் பகுதியில் விபத்துக்குள்ளானது. மேலும் அச்சாலையை ஒரு பெண் கடக்க முயன்றதாகவும் வேகமாக வந்த வேன் ஆனது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.