சீனா: சீனாவின் கிழக்கு பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தால் தொடர்புகளற்று தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். ஜியாங்சி மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்திருக்கும் நிலையில் சுமார் 10,800 ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.