டெல் அவிவ்: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் இந்தியர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். டெல் அவிவ்வில் உள்ள நேவ் ஷானன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல இந்திய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் ஒரு வீட்டில் கேரளாவை சேர்ந்த ஜெரோம் ஆர்தர் பிலிப் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் குடியிருப்போரிடையே ஏற்பட்ட தகராறு ஒன்றில் ஜெரோமை, அக்குடியிருப்பிலேயே வசித்த வேறு சில இந்தியர்கள் கத்தியால் குத்தினர். இதை தட்டிக்கேட்ட கேரளாவை சேர்ந்த அவரது நண்பர் பீட்டர் சேவியரையும் அவர்கள் தாக்கினர்.