மஞ்சூர் அருகே பெண் சிறுத்தை பலி

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தாய்சோலா கோவிலட்டி வனப்பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதருக்குள் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது தெரிந்தது. இதை தொடர்ந்து மாவட்ட வனத்துறையினர் சென்று சிறுத்தையின் உடலை மீட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் குழுவினர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை நடத்தினர். சுமார் 10வயது மதிக்கதக்க பெண் சிறுத்தையான இது நோய்வாய்ப்பட்டு இறந்திருக்க கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: