2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றபோது பல விஷயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். இனி அதுபோன்ற தவறுகளை செய்யக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டோம். பலவீனங்களை சரி செய்ய மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. நடு கட்ட ஓவர்களில் விக்கெட் வேட்டை நடத்துவதற்காகவே மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களை அணியில் சேர்த்தோம். சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய அணியை விட தற்போதைய இந்திய அணி பலம் வாய்ந்தது. நடப்பு உலக கோப்பையின் முதல் வாரம் மிக சுவாரசியமாக இருந்தது.