சென்னை: செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் பழைய காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (50). அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (55). இவரது மருமகன் பழனி (35). திருநாவுக்கரசுவின் அக்கா ரேவதி, குரோம்பேட்டையில் வசிக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ரேவதி, திருநாவுக்கரசு மூலம் வீட்டுமனை வாங்குவதற்காக, ₹1.5 லட்சத்தை பழனியிடம் கொடுத்தார். ஆனால் பழனி, சொன்னபடி வீட்டுமனை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரேவதி, தனது தம்பி திருநாவுக்கரசு, சிவகுமார் ஆகியோருடன், ஏழுமலை வீட்டுக்கு சென்றார். அங்கு நிலம் வாங்குவதற்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கடும் வாக்குவாதம் நடந்தது.