ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, விநாடிக்கு 1,800 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த 8 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்தது.